வியாழன், 5 அக்டோபர், 2017





அற்புத திருத்தலங்கள் 



ஸ்ரீ வனதுர்க்கை ஆலயம்- கதிராமங்கலம் (தஞ்சை மாவட்டம் )




ஜோதிடத்தில்  நாம் கண்டு அஞ்சக்கூடிய தோஷங்களில் முதன்மையானதாகக் கருதப்படும் ராகு மற்றும் கேது தோஷமாகும். ஒருவரது ஜாதகத்தில் ராகு, கேது சரிவர அமையவில்லை எனில் அதனால் ஏற்படும் விளைவுகளை குறைப்பதற்காக   வழிபட வேண்டிய தெய்வங்களுள் முக்கியமானதாக கருதப்படும் பரிகார ஸ்தலம்  இந்த ஸ்ரீ வனதுர்கை கோவிலாகும். இது தஞ்சைமாவட்டம் கதிராமங்கலம்  என்னும் ஊரில் அமைந்துள்ள ஸ்தலமாகும். மேலும் இது அகத்தியரால் ஸ்ரீசக்ர வழிபாடும் செய்யப்பட்ட கோவிலாகும். இது பரிகார ஸ்தலம் என்பதால் இங்கு திருவிழாக்கள் கிடையாது.


                            
இந்த கோவிலின் அருகில் புகழ் பெற்ற  சூரியனார்கோவிலும் மற்றும் சுக்ரன் ஸ்தலமாகிய கஞ்சனூரும் அமைந்துள்ளது.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக