சனி, 28 அக்டோபர், 2017

ராகு, கேது தோஷம் போக்கும் திருப்பாம்புரம்

ராகு மற்றும் கேது கிரகங்களின் தோஷம் போக்ககூடிய முக்கியமான ஸ்தலம் திருவாரூர் மாவட்டம் திருப்பாம்புரம் ஆகும் . இது அப்பர் சம் பந்தர், சுந்தரர் மூவராலும் பாட பெற்ற புண்ணிய ஸ்தலமாகும்.




இங்கு உள்ள கோவிலில் உள்ள மூலவரின் பெயர் பாம்புரநாதர் என அழைக்கப்படும் ஸ்ரீ சேஷபுரீஸ்வரர் ஆவார். அம்பாள் ஸ்ரீ பிரம்மராம்பிகை.


இந்த ஆலயத்தின் சிறப்பு ராகு மற்றும் கேது இருவரும் ஒரே கல்லில் அமர்ந்து அருள் புரிவதாகும். மேலும் இந்த தலத்தை அனந்தன் , வாசுகி,தட்சன், கார்கோடகன், சங்கபாலன், குளிகன், பத்மன், மகாபத்மன், மற்றும் ஆதிசேஷன் ஆகியோர் வழிபட்ட தலமாகும். நாகராஜனான வாசுகியும், இன்னும் சில பாம்புகளும் ஒரு மகாசிவராத்திரி இரவில் முதல் காலத்தில் கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலிலும், இரண்டாம் காலத்தில் திருநாகேஸ்வரத்திலும், மூன்றாம் காலத்தில் திருப்பாம்புரத்திலும், நான்காம் காலத்தில் நாகூரிலும் வழிபட்டு பலன் அடைந்ததாகத் தலபுராணங்கள் கூறுகின்றன 


 ராகு மாறும் கேது தோஷம் உடையவர்கள் இங்கு வந்து பரிகாரம் செய்வதன் மூலம் அவர்களுடைய தோஷம் நிவர்த்தி ஆகும் என்பது உண்மை. 



இத்தலம் கும்பகோணம் -காரைக்கால் செல்லும் வழியில் கற்கத்தி என்னும் ஊரில் இருந்து 3 கி .மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இன்றும் இந்த கோவிலில் செவ்வாய்,வெள்ளி,மற்றும் ஞாயிற்று கிழமைகளில் கோவிலினுள் பாம்பு இருக்கும் மணத்தை உணரலாம் . 

திங்கள், 9 அக்டோபர், 2017

சண்டிகேஸ்வரர் முன் கை தட்டலாமா? அல்லது சொடுக்கு போடலாமா?



சிவ ஆலயங்களில் பிரகாரம் சுற்றி வரும்பொழுது சண்டிகேஸ்வரர் முன் சிலர் கையை தட்டி வணங்குவதும், சொடுக்கு போட்டு வணங்குவதும் செய்கிறனர்.


இது மிக பெரிய பாவ செயலாகும். பொதுவாக சண்டிகேஸ்வரர்க்கு காது கேட்பதில்லை என நினைத்து கொண்டு இவ்வாறு செய்கின்றனர். அது தவறு. சண்டிகேஸ்வரர் ஒரு சிறந்த சிவ பக்தர். அவர் எந்த நேரமும் சிவ தியானத்தில் இருப்பவர். மேலும் சிவனுடைய கோயில் சொத்துக்களை பாதுகாப்பவர்.






நாம் சிவ தரிசனம் முடித்து செல்லும்போது சண்டிகேஸ்வரர் சன்னதியில் இந்த கோவிலில் இருந்து எந்த விதமான சொத்துக்களையும் எடுத்து செல்லவில்லை என்பதற்கு அடையாளமாக அவர் முன் மெலிதாக நம் இரண்டு கைகளையும் தடவி ஓம் நமசிவாய என கூறி வழிபட வேண்டும். இதுவே முறையாகும்.




நந்தி விலகிய ஸ்தலம் - திருப்புன்கூர் 



நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் அருகில் அமைந்துள்ள தலம் திருப்புன்கூர் என்பதாகும் . இங்கு மிகப்பெரிய நந்தி சிவனை நோக்கி இல்லாமல் சற்று விலகிய நிலையில் உள்ளது .

தாழ்த்தப்பட்ட குலத்தை சேர்ந்த நந்தனார் என்னும் சிவனடியார் சிதம்பரம் நடராஜரை தரிசிக்க செல்லும் வழியில் திருப்புன்கூர் வந்தார். அவர் தாழ்த்தப்பட்ட  குலத்தை சேர்ந்தவர் என்பதால் கோவிலினுள் சென்று வழிபட அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் வெளியில் நின்று சிவனை காணும் நோக்கில் எட்டி எட்டி பார்த்தார். ஆனால் அவரால் சிவனை தரிசிக்க இயலவில்லை. காரணம் மிகப்பெரிய நந்தி சிவலிங்கத்தை மறைத்து நின்றது. இதை அறிந்து துவார பாலகர்கள் சிவனிடம் தெரிவித்தனர்.சிவனும் நந்தியிடம் என் பக்தன் வந்துள்ளான் அவனுக்கு நான் தரிசனம் தர வேண்டும். அதனால் சற்றே விலகியிருப்பாய் என நந்திக்கு கட்டளை இட்டார். அவ்வாறே நந்தியும் விலகி நின்றது . இதன் மூலம் நந்தனார்  சிவ தரிசனத்தை காண முடிந்தது. 




இன்றும் கூட இந்த கோயிலில் நந்தி விலகி இருப்பதை நாம் காண முடியும். மேலும் இந்த தலத்தில் மற்ற தலங்களில் உள்ளதை போல நந்திக்கு நாக்கு கிடையாது. துவார பாலகர்களும் சற்றே தலையை குனிந்த  நிலையில்  இருப்பதையும் காணலாம்.

சனி, 7 அக்டோபர், 2017


கடன் மற்றும் எதிரி தொல்லை நீக்கும் பைரவர் வழிபாடு 



ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி திதியில் சிவன் கோவிலில் உள்ள பைரவருக்கு முழு முந்திரி பருப்பு மாலை அணிவித்து வந்தால் கடன் தொல்லைகள் நீங்கும் .

அதேபோல் அவருக்கு அபிஷேகமும் தயிர் சாதம் அன்னம் நைவேத்தியம் செய்யும்பொழுது எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் மற்றும் திருஷ்டிகள் நீங்கும்.

பைரவர் வழிபாட்டின்  போது மாமிசம் உணவு மற்றும் மது, போதை வஸ்துகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

ஆதிசங்கரர் இயற்றிய காலபைரவாஷ்டகம் பாராயணம் செய்து வந்தால் நன்மை உண்டாகும்.

தேவலோக விருட்சம் 



வன்னி மரமானது தேவலோக விருட்சமாக கருதப்படுகிறது . அதன் அடியில் நின்று நாம் நினைத்ததை வேண்டிக்கொண்டால் நிச்சயம் நடக்கும்  என்பது ஐதிகம் . இதன் அடியில் அல்லது இதை ஸ்தல விருட்சமாக அமைந்த கோயில்கள் மிகவும் சக்தி நிறைந்ததாக காணப்படும். 






முக்கியாமாக வன்னி மரத்தடி பிள்ளயார் மிகவும் சக்தி உடையவர். "வன்னி" என்கிற  பெயரை ஒருமுறை உச்சரித்தால் பாவங்கள் விலகும் என்று ப்ரம்ம தேவன் இந்திரனிடம் கூறிய கூற்றாகும். வன்னி இலை விநாயகருக்கும், சனீஸ்வரனுக்கு மிகவும் பிடித்ததாகும். . அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்  வன்னி மரத்தை வழிபட மேன்மை கூடும்.

வன்னி வெற்றியை தரக்கூடியது. விஜயதசமி அன்று மகிஷா சுரனை அழிக்க அம்பாள் வேல் வாங்கியது வன்னி மரத்தின் அடியில் ஆகும் . 

மேலும் குழந்தை பேறு இல்லாதவர்கள் வன்னி மரத்தை தொடர்ந்து சுற்றி வந்து வணங்க குழந்தை பேறு  கிட்டும் என்பது உண்மை .




குல தெய்வ வழிபாடு 




நம் தலைமுறை தொடரவும் வாழும் காலத்தில் எந்தவித துன்பமும் நம்மை அணுகாமலும் இருக்க நாம் மறக்காது செய்ய வேண்டியது அவரவர் குலதெய்வ வழிபாடாகும் . இந்த குலதெய்வ வழிப்பாட்டை ஒருவர் மறக்கும் பொழுது அவரது குடும்பத்தில் எண்ணற்ற பிரச்சினைகள் தோன்றுகின்றன. அதனால் வருடத்திற்கு ஒருமுறை அவர்களுடைய குலதெய்வ கோவிலுக்கு சென்று குடும்ப வழக்கப்படி செய்ய வேண்டிய பூஜைகளை செய்து வழிபாடு செய்ய வேண்டும்.

வேறு சில காரணங்களால் சிலருக்கு அவர்களது குல தெய்வம் எது என்று தெரியாமலும் பல்வேறு தெய்வ வழிபாட்டை மேற்கொள்கின்றனர். அவர்களின் ஜாதகத்தில்  உள்ள பூர்வ புண்ணிய ஸ்தானத்தை கொண்டு அவர்களது குல தெய்வம் எது  என்று ஒரு தேர்ந்த ஜோதிடரால் கூற இயலும். அதன்படி அவர்கள் சரியான குலதெய்வத்தையும் அது அமைந்துள்ள ஊரையும் தெரிந்து கொண்டு தவறவிட்ட வழிபாட்டை தொடர்வது நலம்.

அப்படியும் இயலாத சூழ்நிலையில் அவர்கள் கலியுக கடவுளான ஸ்ரீ வெங்கடேச பெருமாளை மானசீகமாக குல தெய்வமாக ஏற்று கொள்ளலாம். 

வியாழன், 5 அக்டோபர், 2017





அற்புத திருத்தலங்கள் 



ஸ்ரீ வனதுர்க்கை ஆலயம்- கதிராமங்கலம் (தஞ்சை மாவட்டம் )




ஜோதிடத்தில்  நாம் கண்டு அஞ்சக்கூடிய தோஷங்களில் முதன்மையானதாகக் கருதப்படும் ராகு மற்றும் கேது தோஷமாகும். ஒருவரது ஜாதகத்தில் ராகு, கேது சரிவர அமையவில்லை எனில் அதனால் ஏற்படும் விளைவுகளை குறைப்பதற்காக   வழிபட வேண்டிய தெய்வங்களுள் முக்கியமானதாக கருதப்படும் பரிகார ஸ்தலம்  இந்த ஸ்ரீ வனதுர்கை கோவிலாகும். இது தஞ்சைமாவட்டம் கதிராமங்கலம்  என்னும் ஊரில் அமைந்துள்ள ஸ்தலமாகும். மேலும் இது அகத்தியரால் ஸ்ரீசக்ர வழிபாடும் செய்யப்பட்ட கோவிலாகும். இது பரிகார ஸ்தலம் என்பதால் இங்கு திருவிழாக்கள் கிடையாது.


                            
இந்த கோவிலின் அருகில் புகழ் பெற்ற  சூரியனார்கோவிலும் மற்றும் சுக்ரன் ஸ்தலமாகிய கஞ்சனூரும் அமைந்துள்ளது.